Connect with us

இலங்கை

தொடரும் கையெழுத்துப் போராட்டம்!

Published

on

Loading

தொடரும் கையெழுத்துப் போராட்டம்!

வடக்கு – கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

தமிழ் தேசிய கட்சிகளினதும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டிலும் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய இந்த போராட்டம் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

இந்த நிலையில் நேற்றையதினம் பளை நகரப் ஆரம்பமாகிய இந்த கையெழுத்து வேட்டை இன்றையதினமும் தொடர்ந்து இடம்பெற்றது.

இன்றைய கையெழுத்து போராட்டத்தில் பளை பிரதேச சபை உறுப்பினர்களான ஈஸ்வரன் டயாளினி, சுபாஸ்கரன் சுஜீபா, மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், பொதுமக்கள் மற்றும் சகோதர மொழியினத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று (2) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் – மருதனார்மடத்தில் நடைபெற்றது.

Advertisement

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்ற இக் கையெழுத்து போராட்டத்தில் பிரதேச வாழ் மக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன