Connect with us

சினிமா

“கல்கி 2” படப்பிடிப்பு நிறுத்தம்…!வெளியான காரணம் என்ன தெரியுமா?

Published

on

Loading

“கல்கி 2” படப்பிடிப்பு நிறுத்தம்…!வெளியான காரணம் என்ன தெரியுமா?

2024-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கல்கி 2898 கி.பி’ படம் ரசிகர்களிடையே புதிய மர்ம உலகை உருவாக்கியது. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் நடித்த இந்த படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை எட்டிய வெற்றி சாதனை படைத்தது.இதன் முதல் பாகம் முடிந்தவுடனே ரசிகர்கள் இரண்டாம் பாகத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, ‘கல்கி 2’ இப்போது தாமதமாகி வருகிறது.இது குறித்து அவர் கூறியதாவது: “இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள், குறிப்பாக சண்டை காட்சிகள் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்காக முக்கிய நடிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கால்ஷீட் தர வேண்டும். ஆனால் தற்போது அவர்கள் ஒவ்வொருவரும் பிசியாக இருப்பதால் இதற்கான நேரம் கிடைக்கவில்லை. எனவே படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.”இதன் விளைவாக, ‘கல்கி 2’ இந்த ஆண்டுக்குள் வெளியாகும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதனால் ரசிகர்கள் 2026-ல் படமாவது வெளியாகுமா என எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். விசுவல்ஸ், ஸ்கேல் மற்றும் நட்சத்திரக் கூட்டணியின் அடிப்படையில், ‘கல்கி 2’ இந்திய சினிமாவில் புதிய அத்தியாயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன