இலங்கை
நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்யத் திட்டம் – துப்பாக்கிதாரி கைது!
நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்யத் திட்டம் – துப்பாக்கிதாரி கைது!
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று மஹரகமவில் வைத்து மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலைத் திட்டம் கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
