இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம்; தேசிய மக்கள் சக்தி அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை!
பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம்; தேசிய மக்கள் சக்தி அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை!
முன்னாள் அமைச்சர் விஜயதாஸ தெரிவிப்பு
பயங்கரவாதத் தடைச்சட்ட விவகாரத்தில், ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்று முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், அதற்குப் பதிலாக பிறிதொரு சட்டத்தை இயற்றுவதாகவும் தேசிய மக்கள் சக்தி தேர்தல் பரப்புரை மேடைகளில் குறிப்பிட்டது. குறிப்பாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதிக்கு அமைய தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. ஆனால், எந்தவொரு விடயத்திலும் அரசாங்கத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லை. துறைசார் நிபுணர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் அரசாங்கத்தால் பெறப்படவில்லை. இது மிகவும் தவறானதொரு விடயமாகும் . இலங்கையில் பயங்கரவாத அமைப்பு இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பயங்கரவாதத்தை அலட்சியப்படுத்த முடியாது. ஏனெனில் பூகோளப் பயங்கரவாதம் பல்வேறு வழிகளில் இன்றும் தாக்கம் செலுத்துகின்றது – என்றார்.
