Connect with us

இந்தியா

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவோம் – காலிஸ்தான் அமைப்பு எஸ்.எஃப்.ஜே மிரட்டல்

Published

on

Khalistan canada

Loading

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவோம் – காலிஸ்தான் அமைப்பு எஸ்.எஃப்.ஜே மிரட்டல்

காலிஸ்தான் அமைப்பான நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (எஸ்.எஃப்.ஜே) கனடாவின் வான்கூவரில் உள்ள இந்தியத் தூதரகத்தை செப்டம்பர் 18-ம் தேதீ “முற்றுகையிட” அழைப்பு விடுத்தது. மேலும், தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக இந்திய-கனடியர்கள் வியாழக்கிழமை தூதரகத்திற்குச் செல்வதை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தியுள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காலிஸ்தான் அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், எஸ்.எஃப்.ஜே கனடாவில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவை காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்க ஒரு உளவு வலையமைப்பை நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது. எஸ்.எஃப்.ஜே வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு – 18 செப்டம்பர் 2023-ல் – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய ஏஜெண்டுகளின் பங்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.“இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்தியத் தூதரகங்கள் ஒரு உளவு வலையமைப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றன, காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர்களை கண்காணித்து வருகின்றனர்” என்றும் அது மேலும் கூறியுள்ளது.2019-ல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு, இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக்கின் முகத்தில் ஒரு குறியுடன் கூடிய சுவரொட்டியையும் வெளியிட்டது. அதற்கு, ‘கனடாவில் இந்தியாவின் இந்துத்துவா பயங்கரவாதத்தின் புதிய முகம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.நடிகர் சில்வெஸ்டர் ஸ்டலோன் ஒரு மிருகக்காட்சிசாலையில் ஒரு காலத்தில் கூண்டு சுத்தம் செய்பவராக இருந்தார், சிங்கம் தன்னை தின்றால் பரவாயில்லை என்று கூட நினைத்தார். அவர், ‘என்னால் அதைத் தாங்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.அந்த அறிவிப்பில், “தியாகி நிஜ்ஜாரின் வழியைப் பின்பற்றும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள், கனடா மண்ணில் இந்திய அரசு இயக்கிய உளவு மற்றும் அச்சுறுத்தலுக்கு பொறுப்புக்கூற கோரி தூதரகத்தை ஒரு வரலாற்றுப்பூர்வமான முற்றுகையை நடத்துவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அறிவிப்பின்படி, காலிஸ்தான் அமைப்பு இந்தியத் தூதரகத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, உள்ளூர் நேரப்படி 12 மணிநேரம் முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.இந்திய உளவாளிகளின் பெரும் அழுத்தத்திற்குப் பிறகு, ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ், காலிஸ்தான் தலைவர் இந்தர்ஜீத் கோசலுக்கு “சாட்சி பாதுகாப்பு” வழங்கியதாக அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன