Connect with us

தொழில்நுட்பம்

வெறும் 19 நொடியில் காஷ்மீர் டூ கன்னியாகுமரி… மணிக்கு 6.87 லட்சம் கி.மீ வேகத்தில் பறந்து விண்கலம் சாதனை!

Published

on

Parker Solar Probe sets speed record

Loading

வெறும் 19 நொடியில் காஷ்மீர் டூ கன்னியாகுமரி… மணிக்கு 6.87 லட்சம் கி.மீ வேகத்தில் பறந்து விண்கலம் சாதனை!

நாசாவின் பார்க்கர் சோலார் புரோப் விண்கலம், செப்.18 அன்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் ஆய்வகத்தில் (APL) உள்ள விமானக் கட்டுப்பாட்டுக் குழுவுடன் தொடர்பு கொண்டு, சூரியனை மிக நெருங்கிச் சென்று மற்றொரு சாதனையைப் படைத்ததை உறுதிப்படுத்தியுள்ளது. ஏ.பி.எல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், சூரியனின் வளிமண்டலம் வழியாகத் தானாகவே பயணித்த பின்னர் அதன் அமைப்புகள் சாதாரணமாகச் செயல்படுவதை ஒரு சிக்னல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.சாதனை வேகம்:செப்.10 முதல் 20 வரை நீடித்த இந்த சூரியப் பயணத்தின்போது, பார்க்கர் சோலார் புரோப் தனது சொந்த உலக சாதனையான மணிக்கு 6,87,000 கிலோமீட்டர் வேகத்தை எட்டியது. இது 4-வது முறையாகும். இதற்கு முன்பு, டிச.24, 2024, மார்ச் 22, 2025 மற்றும் ஜூன் 19, 2025 ஆகிய தேதிகளிலும் இந்த விண்கலம் இந்த உச்ச வேகத்தை அடைந்திருந்தது. இந்த அதீத வேகத்தில் பயணித்தால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு வெறும் 19 நொடிகளில் செல்ல முடியும்.இந்த விண்கலம் சூரியனைச் சுற்றி அதன் தனித்துவமான சுற்றுப்பாதையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகான எதிர்காலப் பயணத் திட்டங்கள் தற்போது நாசாவின் ஆய்வில் உள்ளன. சூரியனின் கொரோனா பகுதியிலிருந்து இதுவரை இல்லாத அளவிலான தரவுகளை விண்கலத்தின் 4 கருவிகள் சேகரித்துள்ளன. 11 வருட சூரிய சுழற்சியில் சூரியன் ஒரு அதிக செயலில் இருக்கும் காலக்கட்டத்திற்குள் நுழைவதால், அதன் செயல்பாடுகள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஆய்வு செய்ய உள்ளனர்.விண்வெளி வானிலையும் எதிர்காலமும்:பார்க்கரின் கருவிகள், சூரியக் காற்று, சூரியத் தீப்பிழம்புகள், கரோனல் மாஸ் எஜெக்‌ஷன்ஸ் (coronal mass ejections) போன்ற முக்கிய விண்வெளி வானிலை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளன. இத்தகைய நிகழ்வுகள் செயற்கைக்கோள்களுக்கு இடையூறு விளைவிப்பது, விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, விமானப் பயணத்தைப் பாதிப்பது, மற்றும் மின் கட்டங்களைச் சிதைப்பது போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.இந்த ஆய்விலிருந்து பெறப்பட்ட அறிவியல் தரவுகள் செப்.23-ஆம் தேதி முதல் பூமிக்கு அனுப்பப்படும். இந்தத் தகவல்கள், விண்வெளி வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்கும், எதிர்கால மனித பயணங்களைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக நிலவு, செவ்வாய் பயணங்களுக்கு மிக முக்கியமானவை.ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஏ.பி.எல். நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டம், நாசாவின் “லிவிங் வித் எ ஸ்டார்” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது, சூரியன் பூமி மற்றும் விண்வெளி சூழல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்கிறது. நம்முடைய விண்மீனைப் பற்றிய அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தத் திட்டம், சூரிய இயற்பியல் ஆராய்ச்சியில் முன்னணியில் நிற்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன