Connect with us

இலங்கை

தூங்கிகொண்டிருந்த கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; தகாத உறவால் விபரீதம்

Published

on

Loading

தூங்கிகொண்டிருந்த கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; தகாத உறவால் விபரீதம்

தூங்கிக்கொண்டிருந்த கணவனை அவருடைய மனைவி கோடாரியால் கொத்திய சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் வீதி 19 ஆம் கட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு குழந்தைகளின் தந்தையான 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

Advertisement

வேறொரு பெண்ணுடன் கணவர் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த கணவன் சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

சந்தேக நபரான நாற்பது வயதுடைய பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன