இலங்கை
காப்பீட்டு இழப்பீடு அதிகரிப்பு!!
காப்பீட்டு இழப்பீடு அதிகரிப்பு!!
வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கைத் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடுத் தொகை 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும்போது இறக்கும் இலங்கைத் தொழிலாளிகளுக்கு இதுவரை வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடுத் தொகை 6 இலட்சமாகும். தற்போது அதனுடன் ரூபா 1.4 மில்லியனைச் சேர்த்து 2 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
