Connect with us

இலங்கை

போலி ஆவணங்களுடன் ஆடம்பர வாகனங்கள் ; தென்னிலங்கை அரசியல்வாதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

Loading

போலி ஆவணங்களுடன் ஆடம்பர வாகனங்கள் ; தென்னிலங்கை அரசியல்வாதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 3 சொகுசு வாகனங்களுடன் வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (29) இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.

இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி எண்களில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்போது லேண்ட் ரோவர் மற்றும் மிட்சுபிஷி ஜீப் வகைகளை சேர்ந்த 3 வாகனங்களும் மீட்கப்பட்டன.

Advertisement

பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், இந்த வாகனங்கள் போலி ஆவணங்களுடன் அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் பதிவு எண்களில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன