இலங்கை
அஸ்வெசும பயனாளிகளுக்கு உதவிகள்!!
அஸ்வெசும பயனாளிகளுக்கு உதவிகள்!!
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உதவித் தொகை பெற்ற 625 குடும்பங்கள் பிரதேச சமூர்த்தி அலகுடன் இணைக்கப்பட்டு, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுவருகிறது.
நாட்டில் உள்ள அஸ்வெசும உதவித்தொகை பெற்ற பயனாளர்களில் 2 இலட்சம் பயனாளர்கள் இவ்வருடம் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரதேச செயலக ரீதியாக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் விருப்பத்துக்கேற்ப வாழ்வாதார உதவிப் பொருள்கள் வழங்கப்படும்.
