Connect with us

சினிமா

இதுவே என் வாழ்க்கையின் மிகச்சிறந்த பரிசு.. ரஹ்மானின் பரிசால் உணர்ச்சிவசப்பட்ட ஜி.வி

Published

on

Loading

இதுவே என் வாழ்க்கையின் மிகச்சிறந்த பரிசு.. ரஹ்மானின் பரிசால் உணர்ச்சிவசப்பட்ட ஜி.வி

இந்திய இசை உலகின் இரு முக்கியத் தூண்களாக இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் இசையின் மாயாஜால நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் விளங்குகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான மனித உறவு மற்றும் பரஸ்பர மதிப்பீடு, அண்மையில் ஒரு நிகழ்வின் மூலம் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.சமீபத்தில் இடம்பெற்ற தேசிய திரைப்பட விருதில், வாத்தி (Vaathi) திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் விருதினைப் பெற்றிருந்தார். இதற்காக, அவரை பாராட்டும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் அவருக்குத் தனிப்பட்ட பரிசாக ஒரு அரிய வெள்ளை நிற பியானோவைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.இந்த நிகழ்வைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஜி.வி. பிரகாஷ், தனது வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக இதை விவரிக்கிறார்.அதவாது, “எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு இதுதான். இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றதற்காக, ரஹ்மான் சார் இந்த அழகான வெள்ளை நிற பியானோவை பரிசளித்துள்ளார். இது அவர்  பயன்படுத்திய பியானோ. இதைவிட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும்..!” என்று குறிப்பிட்டிருந்தார்  ஜி.வி. பிரகாஷ்.இந்த வெள்ளை நிற பியானோ, ஏ.ஆர். ரஹ்மானின் தனிப்பட்ட ஸ்டுடியோவில் பயன்பட்டது என்றும், பல புகழ்பெற்ற இசைதாளங்கள் அதிலிருந்து உருவானவை என்றும் தெரிகிறது. எனவே, இது ஒரு இசை பரம்பரையின் சின்னமாகவும், ஒரு இசைச்சொல்லின் ஆழ்ந்த அன்பின் பிரதியாகவும் அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன