இலங்கை
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இன்றுமுதல் தினமும் சத்திர சிகிச்சைகள்!
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இன்றுமுதல் தினமும் சத்திர சிகிச்சைகள்!
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடம் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் தினமும் இயங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கிளிநொச்சி மருத்துவமனையில் இடமாற்றத்தில் உள்ள மயக்க மருந்து மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இரண்டாவது மயக்க மருந்து மருத்துவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்தே, சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் சத்திர சிகிச்சைக்கூடம் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் தினமும் இயங்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
