இலங்கை
மாணவர்களுக்கு டிஜிற்றல் வளங்கள்
மாணவர்களுக்கு டிஜிற்றல் வளங்கள்
இலங்கை மாணவர்கள் விரைவில் கூகிள் நிறுவனத்தின் ஜெமினி மேம்பட்ட தேடுபொறி கருவிகள் மற்றும் பிற டிஜிற்றல் வளங்களை இலவசமாகப் பெறுவார்கள் என டிஜிற்றல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற 2025க்கான தேசிய ஏஐ (AI) எக்ஸ்போக் கண்காட் சியில் டிஜிற்றல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இந்தத் திட்டத்தை அறிவித்தார். இது நாட்டின் கல்வித்துறைக்கு “பெரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும்” எனச் சுட்டிக்காட்டினார். “நமது நாட்டின் ஏஐ திறனை வளர்ப்பதில் இது மகத்தான ஒரு மைல் கல்லாகும்”. இது உலகளாவிய ரீதியில் சிறந்து விளங்குபவர்களுடன் போட்டியிட எங்கள் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
