Connect with us

சினிமா

படத்தால் தனது நிஜப் பெயரையே மாற்றிய பிரபல நடிகர்..! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் வைரல்.!

Published

on

Loading

படத்தால் தனது நிஜப் பெயரையே மாற்றிய பிரபல நடிகர்..! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் வைரல்.!

தமிழ் சினிமாவில், சில படங்கள் பார்வையாளர்களின் உள்ளங்களில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோல், திரையரங்கில் வெளியாகி கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும் புதுமையான கோணத்தில் காட்டிய திரைப்படம் “அறை எண் 305ல் கடவுள்”. இந்த படத்தில் நடித்த ஒரு முக்கியமான supporting கதாபாத்திரம் “ஜாவா சுந்தரேசன்”, ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தது.இந்த கதாபாத்திரம் மூலம் பிரபலமடைந்த நடிகர் சாம்ஸ், தற்போது தனது உண்மையான பெயரை மாற்றிக் கொண்டு, இனிமேல் தன்னை “ஜாவா சுந்தரேசன்” என்றே அழைக்க வேண்டுமென அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.பொதுவாகவே ஒரு நடிகர், ஒரு திரைப்படக் கதாபாத்திரத்தால் மக்கள் மத்தியில் புகழ் பெறும் போது, அது ஒரு வெற்றியின் அடையாளமாகவே பார்க்கப்படும். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தையே தனது அடையாளமாக மாற்றிக் கொள்வது என்பது மிகவும் அபூர்வமான மற்றும் உணர்வுபூர்வமான நிகழ்வாகும்.நடிகர் சாம்ஸ், “அறை எண் 305ல் கடவுள்” திரைப்படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்திருந்தார். அந்தத் தோற்றம், பேச்சு முறை அனைத்தும் அவரது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த முக்கிய முடிவை அறிவிப்பதற்காக, நடிகர் சாம்ஸ், படத்தின் இயக்குநர் சிம்பு தேவனை நேரில் சந்தித்து, நன்றியும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன