இலங்கை
கிரிப்டோகரன்சி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி
கிரிப்டோகரன்சி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி
சர்ச்சைக்குரிய கிரிப்டோகரன்சியை கையாள்வதற்கான அறிவியல் வழி குறித்து கொள்கை முடிவுகளை எடுக்க உயர் மட்டக் குழுவை நியமிக்க இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.
இந்தத் தேவை குறித்து நிதி அமைச்சகத்திற்கு இலங்கை மத்திய வங்கி ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளது.
நிதி அமைச்சக வட்டாரங்களின்படி, இந்த நடைமுறைக்கு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.
அரசாங்க அமைச்சர்கள் சமர்ப்பித்த சொத்து அறிவிப்புகளில், அவர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது சமீபத்திய நாட்களில் சமூகத்தில் ஒரு சூடான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
