Connect with us

இலங்கை

மகளிர் உலகக் கிண்ண போட்டி மழையால் கைவிடப்பட்டது

Published

on

Loading

மகளிர் உலகக் கிண்ண போட்டி மழையால் கைவிடப்பட்டது

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.

Advertisement

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து நியூசிலாந்து மகளிர் அணி துடுப்பெடுத்தாடவிருந்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டது.

Advertisement

இந்தநிலையில் தொடர்ச்சியான மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன