Connect with us

இந்தியா

கச்சத்தீவு விவகாரத்தில் மீண்டும் களத்தில் பாரதிய ஜனதா கட்சி!

Published

on

Loading

கச்சத்தீவு விவகாரத்தில் மீண்டும் களத்தில் பாரதிய ஜனதா கட்சி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு   குற்றம் சாட்டியுள்ளார். 

காங்கிரஸுடன் கூட்டணி வைத்து திமுக ஆட்சியில் இருந்தபோது, ​​”அது என்ன செய்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.கச்சத்தீவை மீட்டெடுக்க அவர்கள் எப்போதாவது முயற்சித்தார்களா என்றும் அவர் வினாவியுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி ஒப்படைத்த போது, ​​கருணாநிதியே தமிழக முதல்வராக இருந்தார். இந்தநிலையில் சட்டசபையில் திமுக தலைவர் துரை முருகன் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய நாகேந்திரன், கச்சத்தீவு, மாநில அரசாங்கத்துக்கு தெரியாமல் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டதை விமர்சித்துள்ளார்.

Advertisement

ஒரு நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசுக்குத் தெரியாமல் வேறு நாட்டிற்கு ஒப்படைக்க முடியுமா?என்றும் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவு தீவு தொடர்பான பிராந்திய மற்றும் கடற்றொழில் உரிமைகள் தகராறு தொடர்பாக தமிழ்நாட்டில் நடந்து வரும் விவாதங்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன