இலங்கை
சிலாவத்துறை கடற்பரப்பில் மீனவரைக் காணவில்லை; தேடல் பணிகள் தீவிரம்!
சிலாவத்துறை கடற்பரப்பில் மீனவரைக் காணவில்லை; தேடல் பணிகள் தீவிரம்!
மன்னார் சிலாவத்துறை கடற்பரப்பில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் நேற்றுக் காணாமற்போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னாரில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு காணாமற்போயுள்ளார். இதையடுத்து, அவரை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
