Connect with us

இலங்கை

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

Published

on

Loading

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையானது இன்று (15) மாலை 7.30 மணி முதல் நாளை (16) மாலை 7.30 மணிவரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை – 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம் – உடநுவர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

மாத்தளை மாவட்டம் – பல்லேபொல மற்றும் அம்பன்கங்க கோரலே பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

Advertisement

கேகாலை மாவட்டம் – யட்டியாந்தொட்டை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

குருநாகல் மாவட்டம் – ரிதிகம மற்றும் அலவ்வ பிரதேச செயலகப் பிரிவு அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

Advertisement

மொனராகலை மாவட்டம் – மெதகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

காலி மாவட்டம் – நெலுவ பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன