இலங்கை
விடுதி அறையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
விடுதி அறையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
நேற்று 15ஆம் திகதி பலகல்ல பகுதியில் உள்ள தற்காலிக விடுதியொன்றின் அறையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இச் சம்பவம் குறித்து திவுலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
