Connect with us

இலங்கை

ஆபத்தான நிலையில் பயணித்த அரச பேருந்து ; கிளிநொச்சியில் சம்பவம்

Published

on

Loading

ஆபத்தான நிலையில் பயணித்த அரச பேருந்து ; கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியிலிருந்து நேற்று  15ஆம் திகதி  பகல் 1.30 மணிக்கு கிளிநொச்சி நோக்கு புறப்பட்ட இலங்கை  போக்குவரத்துச் சபையின்   அரச பேருந்து ஒன்று ஊற்றுப்புலம் சந்திக்கு அப்பால் மிகவும் ஆபத்தான நிலையில் அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளது. பேருந்தின் இரண்டு வாசல்கள் மற்றும் பேருந்து பின்பகுதியான பவர் பகுதியிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து பயணித்துள்ளது. 

 சில மாதங்களுக்கு முன்  இதே வழி தடத்தில் தனியார் பேருந்து இவ்வாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதன் காரணமாக தான் குறித்த பேருந்தின் வழி அனுமதி தடம் சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதோடு, நடத்துநர் மற்றும் சாரதிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என தனியார் பேருந்து சங்கத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

பயணிகளின் பாதுகாப்பு கருதி பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன