Connect with us

இலங்கை

முரசுமோட்டையில் டிப்பரும் உழவு இயந்திரமும் விபத்து – மூவர் படுகாயம்!

Published

on

Loading

முரசுமோட்டையில் டிப்பரும் உழவு இயந்திரமும் விபத்து – மூவர் படுகாயம்!

பரந்தன் – முல்லைத்தீவு, A-35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர்மோதி விபத்துக்குள்ளானத்ல் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு 9மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சீமெந்து கற்களை ஏற்றி பயணித்த உழவு இயந்திரமும் எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

Advertisement

உழவு இயந்திரத்துடன் மோதிய டிப்பர் வீதியில் குறுக்காக தடம் புரண்டது. உழவு இயந்திரத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பயணித்திருந்த நிலையில் மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் டிப்பர் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன