Connect with us

இலங்கை

வெடித்துச் சிதறிய எரிமலை ; பல கிலோமீற்றருக்கு தூக்கி வீசப்பட்ட சாம்பல்!

Published

on

Loading

வெடித்துச் சிதறிய எரிமலை ; பல கிலோமீற்றருக்கு தூக்கி வீசப்பட்ட சாம்பல்!

இந்தோனேஷியாவில் உள்ள மௌண்ட் லெவோடோபி லக்கி- லாகி எரிமலை நேற்று (15) வெடித்துள்ளது.

எரிமலை வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கி.மீ உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், அதிகாரிகள் ஆக உயரிய நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்தோனேஷிய நேரப்படி எரிமலை அதிகாலை 1.35 மணிக்கு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிப்பு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களுக்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை இந்தோனேஷியாவின் புவியியல் மையம் வெளியிட்டது.

எரிமலையிலிருந்து 6 கிலோ மீற்றர் முதல் ஏழு கிலோ மீற்றர் வரையிலான தூரம் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன