இலங்கை
‘13′ நடைமுறையானால் வடக்கு சுயாதீனமாகும்; பதறுகின்றார் வீரசேகர!
‘13′ நடைமுறையானால் வடக்கு சுயாதீனமாகும்; பதறுகின்றார் வீரசேகர!
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், இலங்கை சமஷ்டி நாடாக மாற்றம் பெறும். அத்துடன் வடக்கு சுயாதீனமாக இயங்கத்தொடங்கும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் இலங்கை சமஷ்டி நாடாக மாற்றம்பெறும். குறிப்பாக வடக்கு மாகாணசபை சுயாதீனமாக மாற்றம் பெறும். பின்னர், அவர்களின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை உருவாக்கவும் வழிகள் அமையும். இவ்வாறானதொரு நிலைமைக்கே பிர பாகரன் முயற்சித்தார். அதற்காக 30 வருடங்கள் போரிட்டார். போர் மூலம் அடைய முடியாமல்போனதை வேறு வழியில் அடைவதற்குரிய முயற்சியா கவே இது உள்ளது. எனவே, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாங் கள் அனுமதிக்க மாட்டோம். அது இலங் கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும் -என்றார்.
