இலங்கை
தமிழக மீனவர்களின் மறியல் நீடிப்பு!
தமிழக மீனவர்களின் மறியல் நீடிப்பு!
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 29பேரின் விளக்கமறியலும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் புதன்கிழமை இவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
