Connect with us

இலங்கை

தீபாவளி பண்டிகை; தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

Published

on

Loading

தீபாவளி பண்டிகை; தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

   தீபாவளி பண்னிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை மத்திய மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளை இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   அதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடாசாலைகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் திகதி திகதி செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

Advertisement

இத்தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 25 ம் திகதி பதில் பாடசாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன