இலங்கை
பெண் OIC வருணிக்கு அச்சுறுத்தலா?
பெண் OIC வருணிக்கு அச்சுறுத்தலா?
மிரிஹான பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகாவத்தவின் அலுவலகத்தில் , அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகரின் தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
வருணி போகாவத்த தற்போது உடல்நலக்குறைவு காரணமாக நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வருணி போகாவத்த தனது உத்தியோகபூர்வ கடமைகளின் போது இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பில் பொலிஸார் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
