இலங்கை
தீபாவளியை முன்னிட்டு யாழில் பொருட்கள் கொள்வனவு!
தீபாவளியை முன்னிட்டு யாழில் பொருட்கள் கொள்வனவு!
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகையும் விளங்குகின்றது. குறித்த பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் பொருட்கள் வாங்குவதில் ஈடுபடுவது வழமை.
அந்தவகையில் நாளையதினம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக யாழ்ப்பாண நகர் பகுதியில் மக்கள் இன்றையதினம் பல்வேறு விதமான பொருட்களை கொள்வனவு செய்யப்பட்டிருந்த புடவைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதனால் யாழ்ப்பாண நகரத்தில் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
