Connect with us

இலங்கை

நாட்டில் அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலா பயணிகளின் வருகை

Published

on

Loading

நாட்டில் அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலா பயணிகளின் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து ஆயிரத்து 151 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 396,274 ஆகும்.

Advertisement

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 167,886 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 125,950 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 111,677 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 108,040 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 90,250 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 81,046 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 53,922 சுற்றுலாப் பயணிகளும் , அமெரிக்காவிலிருந்து 50,027 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 75,657 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன