இலங்கை
இன்று முதல் நடைமுறைக்கு வரும் GovPay செயலி!
இன்று முதல் நடைமுறைக்கு வரும் GovPay செயலி!
தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வசதி எதிர்வரும் மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
