Connect with us

இலங்கை

இஷாரா செவ்வந்தியை மறைத்து வைத்த 7 பேர் கைது!

Published

on

Loading

இஷாரா செவ்வந்தியை மறைத்து வைத்த 7 பேர் கைது!

  இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருக்க உதவி புரிந்தமை தொடர்பில் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தினுடான பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதற்கமைய, கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் இஷாரா செவ்வந்தி தலைமறைவாயிருந்தார்.

அதன்படி, மித்தெனிய, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என இஷாரா செவ்வந்தி தங்கியிருந்த பகுதிகளில் உதவி புரிந்தவர்கள் கைது செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் இஷாரா தங்கியிருந்த பகுதிகளுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன