இலங்கை
வெலிகம சபைத் தவிசாளர் கைதுசெய்யப்படாதது ஏன்; ஐ.ம.ச. பொதுச்செயலாளர் கேள்வி
வெலிகம சபைத் தவிசாளர் கைதுசெய்யப்படாதது ஏன்; ஐ.ம.ச. பொதுச்செயலாளர் கேள்வி
சுட்டுக்கொலை செய்யப்பட்ட வெலிகமப் பிரதேசசபைத் தவிசாளருக்கு பாதாளக் குழுவுடன் தொடர்புள்ளதெனில் அவர் உயிருடன் இருக்கும் போது ஏன் கைது செய்யப்படவில்லை? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆட்சியின்கீழ் முதலாவது அரசியல் படுகொலை இடம்பெற்றுள்ளது. அனைத்துச் சம்பவங்களையும் பாதாளக்குழுக்கள் மீது திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஜனநாயக வழியில் மக்கள் வாக்குகளுடன் அவர் (வெலிகம பிரதேசசபை தலைவர் ) சபைக்கு வந்தவர். அவரின் படுகொலைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும். அவருக்குப் பாதாளக்குழுவுடன் தொடர்புள்ளதெனில் இதுவரையில் அவர் ஏன் கைது செய்யப்படவில்லை?- என்றார்.
