இலங்கை
வெளிநாட்டுச்சக்திகளுக்கு அடிபணியாதவராம் ரணில்; வஜிர அபேவர்த்தன கூறுகிறார்
வெளிநாட்டுச்சக்திகளுக்கு அடிபணியாதவராம் ரணில்; வஜிர அபேவர்த்தன கூறுகிறார்
வெளிநாட்டுச் சக்திகளால் அடிபணிய வைக்கமுடியாத தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அதனால் தான் நாட்டு நலன்கருதி அவர் பின்னால் அணி திரண்டுள்ளோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தனியார் வானொலி அலைவரிசையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
ரணில் விக்கிரமசிங்க என்ற பெருந்தலைவருக்குப் பதவி முக்கியம் அல்ல. ஜனாதிபதிப் பதவி, பிரதமர் பதவி என எந்தப் பதவியைக்காட்டியும் அவரை அடிபணிய வைக்கமுடியாது. பதவிகள் இல்லாமல் வீட்டில் இருப்பார். ஆனால் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டார். நாம் ஏன் ரணிலின் பின்னால் நிற்கின்றோம் எனச் சிலர் கேட்கின்றனர். வெளிநாட்டு சக்திகளால் அடிபணிய வைக்கமுடியாத தலைவர் தான் அவர். இதுதான் பிரதான காரணம் என்பதை கூறிக்கொள்கின்றேன்- என்றார்.
