இலங்கை
அசாதாரண காலநிலை காரணமாக யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!
அசாதாரண காலநிலை காரணமாக யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!
நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/45 கிராம சேவகர் பிரிவில் பலத்த காற்று காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களை சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
