இலங்கை
மனைவியுடன் சென்ற பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் மீது கோடுர தாக்குதல்
மனைவியுடன் சென்ற பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் மீது கோடுர தாக்குதல்
பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (24) மாலை இனந்தெரியாத நபரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச சபை உப தலைவர் தனது மனைவியுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பத்தேகம, கொடகந்த பகுதியில் வீதியை மறித்து அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர் தற்போது காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதல் தொடர்பில் பொத்தல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்தேகம பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் தொடர்பாக பொத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
