இலங்கை
மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடத்தத்திட்டம்
மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடத்தத்திட்டம்
காற்றுள்ள போது தூற்றிக்கொள்ள காய் நகர்த்ததும் அரசாங்கம்
மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஓர் முக்கியமான நகர்வாக 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த வரவு – செலவுத் திட்டமாக முன்வைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாது என்று தெரியவருகின்றது.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக்குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு ஆதரவு ஏற்பட்டுள்ளது. அதையும் ஒரு வாய்ப்பாக கருதி விரைவில் தேர்தலுக்கு செல்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக வரவு – செலவுத் திட்டக்கூட்டத்தொடருக்கு மத்தியில் கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார். எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்று அறியமுடிகின்றது.
