இலங்கை
பத்மேவின் சொத்துகளை முடக்குவதற்குத் தீர்மானம்
பத்மேவின் சொத்துகளை முடக்குவதற்குத் தீர்மானம்
பாதாள உலகக்கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைக்கு கெஹெல்பத்தர பத்மேவுக்கு உரித்தான சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சட்டவிரோதச் சொத்து சேகரிப்பு விசாரணைப் பிரிவினரால் இனங்காணப்பட்டுள்ளன.
பணச்சலவைச் சட்டத்தின்கீழ் குறித்த சொத்துகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அவற்றை அரசுடைமையாக்க சட்டவிரோதசொத்துச் சேகரிப்பு விசாரணைப்பிரிவின் பொலிஸார் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேபோன்று இன்னும் பல பாதாள உலகப்புள்ளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
