Connect with us

இலங்கை

இலங்கை – ரஷ்ய இராணுவப் பயிற்சியில் வெடித்த கைக்குண்டு; மூவர் மருத்துவமனையில்

Published

on

Loading

இலங்கை – ரஷ்ய இராணுவப் பயிற்சியில் வெடித்த கைக்குண்டு; மூவர் மருத்துவமனையில்

    மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

விபத்தில் காயமடைந்த மூன்று இராணுவ வீரர்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இராணுவ வீரர்களின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் இந்த நாட்களில் நடைபெறும் இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன