இந்தியா
5 ஆண்டுகளுக்கு பின் சீனாவிற்கான விமான சேவையை ஆரம்பித்த இந்தியா!
5 ஆண்டுகளுக்கு பின் சீனாவிற்கான விமான சேவையை ஆரம்பித்த இந்தியா!
இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், லடாக் எல்லைப் பிரச்னை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
