Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் நன்னீர் மீன்வள வளர்ச்சிக்காக இரணைமடுக்குளம் சங்கத்துக்கு வழங்கப்பட்ட வள்ளங்கள் மற்றும் வலைகள்

Published

on

Loading

கிளிநொச்சியில் நன்னீர் மீன்வள வளர்ச்சிக்காக இரணைமடுக்குளம் சங்கத்துக்கு வழங்கப்பட்ட வள்ளங்கள் மற்றும் வலைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் நன்னீர் மீன்வளத் துறையை மேம்படுத்தி, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணமாடு மீனவ சங்கத்திற்கும் பிற சங்கங்களுக்கும் மீன்பிடி வள்ளங்களும் வலைகளும் கரைச்சி பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டன. இந்த திட்டம் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டதாகும்.

இதன் மூலம் பல நன்னீர் மீனவர்கள் நேரடியாகப் பயனடைந்து, தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

Advertisement

images/content-image/1761763982.jpg

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் திரு. தவச்செல்வன் முகுந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. பூவிலிங்கம் ராஜ்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல நன்னீர் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

நன்னீர் மீன்பிடி வளங்களைப் பாதுகாத்து வளர்ப்பது, நமது கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய வழியாகும்.

இத்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் நன்னீர் மீன்வள வளர்ச்சிக்கு புதிய தளமாக அமையும் என நம்புகிறேன்.

Advertisement

images/content-image/1761764081.jpg

images/content-image/1761764094.jpg

images/content-image/1761764109.jpg

லங்கா4 (Lanka4)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன