Connect with us

இலங்கை

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலி

Published

on

Loading

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலி

  இந்தியா ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது.

Advertisement

ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

கூட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன