Connect with us

இலங்கை

விசேட சுற்றிவளைப்பில் மூன்று கோடிக்கு மேற்பட்ட கஞ்சா மீட்பு!

Published

on

Loading

விசேட சுற்றிவளைப்பில் மூன்று கோடிக்கு மேற்பட்ட கஞ்சா மீட்பு!

யாழ். மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நேற்றையதினம் கேரள கஞ்சாவை பருத்தித்துறை கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது  47 பொதி கஞ்சா மற்றும் படகு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதுடன்  சந்தேகநபர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், கஞ்சாப் பொதிகள், படகு உட்பட்ட சான்றுப் பொருட்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த பொலிஸார் தயாராகி வருகின்றனர். மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் 3 கோடிக்கும் அதிக பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன