இலங்கை
நாட்டின் பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை!
நாட்டின் பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளமை தொடர்பில் சுகவீனம் மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என வளிமண்டலவியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையை குறிக்கும் வெப்பச்சுட்டெண் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், பொலநறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உயர வாய்ப்புள்ளது. ஆகவே குறித்த பகுதியில் மக்கள் வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும். நீர்ச்சத்துடன் இருத்தல்,மெல்லிய ஆடைகளை அணிதல், நீண்ட நேரம் வெளியில் இருப்பதை தவிர்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
