Connect with us

இலங்கை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவர் அதிரடியாக கைது!

Published

on

Loading

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவர் அதிரடியாக கைது!

கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று 01ஆம்திகதி  முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் லெல்லம பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 26 கிராம், 890 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

Advertisement

கைதான சந்தேகநபர், மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன்  என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், இவர் பல குற்றங்களுடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன