இலங்கை
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் – ஆறுகால்மடத்தில் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்க்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
