இலங்கை
ஹட்டன்-கிதுல்கல பிரதான சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி!
ஹட்டன்-கிதுல்கல பிரதான சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி!
கிதுல்கல பொலிஸ் பிரிவின் அட்டன்-கிதுல்கல வீதியில் 39வது கிலோமீட்டர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிதுல்கலவில் இருந்து அட்டன் நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து தளிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கிதுல்கல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர்.
சடலம் தளிகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிதுல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
