Connect with us

இலங்கை

இலங்கையில் அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் வருகை

Published

on

Loading

இலங்கையில் அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் வருகை

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பாகும் என அந்த அதிகார சபை வௌியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கமைய இந்தியாவில் இருந்து 48,113 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 12,934 பேரும், ரஷ்யாவிலிருந்து 11,496 பேரும், சீனாவிலிருந்து 10,864 பேரும், ஜெர்மனியில் இருந்து 9,753 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது வௌியிடப்பட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரத்துடன் 2025 ஆம் ஆண்டில் இலங்கை வந்த மொத்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,890,687 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன