Connect with us

இலங்கை

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் கைது

Published

on

Loading

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் கைது

  யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரரை பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் இன்றைய தினம் (06) அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Advertisement

நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றைய தினம் (05) சாரதிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன