இலங்கை
வடக்கு தென்னை முக்கோண வலய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபா மானியம்…
வடக்கு தென்னை முக்கோண வலய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபா மானியம்…
வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தெங்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபா மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி இந்த விடயத்தை தெரிவித்தார்.
புதிதாக தெங்கு பயிரிடப்படும் காணிக்கு நீர் வசதிகளைப் பெறுவதற்காக இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் 10 இலட்சம் தென்னங் கன்றுகளை வளர்க்கும் திட்டத்துடன் இணைந்து இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
