Connect with us

இலங்கை

கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்தும் பொலிஸார்!

Published

on

Loading

கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்தும் பொலிஸார்!

அச்சுவேலி பொலிஸார், கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த சம்பவம் இன்றையதினம் பி.ப 3.27 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

நிலாவரை சந்தியில் இருந்து அச்சுவேலி பக்கமாக, மோட்டார் சைக்கிளில் இரண்டு பொலிஸார் பயணித்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

வாகனங்களில் பயணிக்கும்போது கைபேசி பாவனையில் ஈடுபடுவது என்பது சட்டத்திற்கு முரணான விடயமாகும். மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய பொலிஸாரே பாதுகாப்பற்ற முறையில் கைபேசியில் உரையாடியவாறு பயணித்தமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பொலிஸாருக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா? என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன